Homeசெய்திகள்சினிமாதி கோட் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவு... சென்னை திரும்பிய விஜய்...

தி கோட் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவு… சென்னை திரும்பிய விஜய்…

-

தி கோட் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நடிகர் விஜய் சென்னை திரும்பினார்.

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும் இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தி கோட் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதற்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றிருந்தார். பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து, தற்போது விஜய் சென்னை திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ