Homeசெய்திகள்சினிமா'சலார் 2' படத்துடன் இந்த பயணம் தொடங்குகிறது.... புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹோம்பலே நிறுவனம்!

‘சலார் 2’ படத்துடன் இந்த பயணம் தொடங்குகிறது…. புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹோம்பலே நிறுவனம்!

-

- Advertisement -

ஹோம்பலே நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே நிறுவனம் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து பெயர் பெற்றுள்ளது. அந்த வகையில் கேஜிஎஃப் 1, கே ஜி எஃப் 2, காந்தாரா, சலார் 1 ஆகிய படங்களை தயாரித்திருக்கிறது. கடைசியாக கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா, ஸ்ரீ முரளியின் பஹீரா ஆகிய திரைப்படங்களை தயாரித்திருந்தது. அடுத்தது ஹோம்பலே நிறுவனத்தின் தயாரிப்பில் காந்தாரா 2 (சாப்டர் 1) திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் ஹோம்பலே நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது நடிகர் பிரபாஸ், 2026,2027,2028 ஆகிய மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் மூன்று திரைப்படங்களை தயாரிக்கப் போவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஹோம்பலே நிறுவனம். அந்த அறிக்கையில், “இந்திய சினிமாவில் சாராம்சத்தை கொண்டாடி அதை உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்தில் ரெபெல் ஸ்டார் பிரபாஸுடன் இணைந்து மூன்று அற்புதமான படங்களின் கூட்டணியில் இணைவதில் பெருமை அடைகிறோம். எனவே மறக்க முடியாத சினிமா அனுபவங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பு இது. தயாராகுங்கள், சலார் 2 படத்துடன் இந்த பயணம் தொடங்குகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.'சலார் 2' படத்துடன் இந்த பயணம் தொடங்குகிறது.... புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹோம்பலே நிறுவனம்!

எனவே இதன் மூலம் பிரபாஸ், பிரித்விராஜ் ஆகியோர் நடிக்கும் சலார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நடிகர் பிரபாஸ், ஸ்பிரிட் போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ