ரஜினியின் வேட்டையன் திரைப்படம் விரைவில் நிறைவடை உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரஜினி, ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை, தூத்துக்குடி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் டீசரையும் அதைத் தொடர்ந்து படத்தின் புதிய போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி நடிகர் ரஜினி வேட்டையன் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு தலைவர் 171இல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.