Homeசெய்திகள்சினிமாசுற்றுப் பயணத்தை சென்னையில் நிறைவு செய்யும் 'பொன்னியின் செல்வன்-2' பட குழு! 

சுற்றுப் பயணத்தை சென்னையில் நிறைவு செய்யும் ‘பொன்னியின் செல்வன்-2’ பட குழு! 

-

இந்திய சுற்றுப் பயணத்தை இன்று சென்னையில் நிறைவு செய்யும் ‘பொன்னியின் செல்வன்-2’ பட குழு!

மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவானது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சுற்றுப் பயணத்தை சென்னையில் நிறைவு செய்யும் 'பொன்னியின் செல்வன்-2' பட குழு! 

அதனைத் தொடர்ந்து நாளைய தினம்(28.04.2023), முந்தைய பாகத்தை போலவே 5 மொழிகளில் உலகம் முழுக்க பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

இதனை விளம்பரப்படுத்தும் நோக்கில் பொன்னியின் செல்வன் படக்குழு சென்னையில் தொடங்கி கோவை, டெல்லி, கொச்சின், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, திருச்சி என இந்தியா முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடி இறுதியாக இன்று சென்னையில் பயணத்தை நிறைவு செய்கிறது.

சுற்றுப் பயணத்தை சென்னையில் நிறைவு செய்யும் 'பொன்னியின் செல்வன்-2' பட குழு! 

நாளை உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

MUST READ