Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் 'திருச்சிற்றம்பலம்' படக் கூட்டணி..... இயக்குனர் இவர் தான்!

மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ படக் கூட்டணி….. இயக்குனர் இவர் தான்!

-

திருச்சிற்றம்பலம் படக் கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.மீண்டும் இணையும் 'திருச்சிற்றம்பலம்' படக் கூட்டணி..... இயக்குனர் இவர் தான்!

கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்கள் வெளியாகின. அதன் பிறகு தற்போது தனுஷ் நடிப்பில் ராயன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தில் புரமோஷன் பணிகளும் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருச்சிற்றம்பலம் படக் கூட்டணி இணையப்போகும் தகவலை தெரிவித்துள்ளார்.மீண்டும் இணையும் 'திருச்சிற்றம்பலம்' படக் கூட்டணி..... இயக்குனர் இவர் தான்! அதாவது அவர் கூறியது என்னவென்றால், “தனுஷ் நானும் நித்யா மேனனும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான கதையை சொல்லி இருக்கிறார். இந்த படத்தை தனுஷ் தான் இயக்கப் போகிறார்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் தனுஷ் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதும் படங்களை இயக்குவதுமாக சினிமாவில் தனது பங்களிப்பை மிகவும் சிறப்பாக கொடுத்து வருகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ