நடிகர் கார்த்தி கடந்த 2007 இல் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர். எந்த கதைக்களமாக இருந்தாலும் சரி அதற்கேற்றார் போல் கிராமத்து நாயகனாகவும் ஸ்டைலிஷ் நாயகனாகவும் நடித்து அசத்தி விடுவார். கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் கடிக்கிறதுக்கும் நடிகர் கார்த்தி இன்று தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் கடைசியாக ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். கார்த்தியின் 25வது திரைப்படமாக வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. ஆனால் தனது முயற்சியை கைவிடாமல் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் தான் கார்த்தி 26. இந்த படத்திற்கு வா வாத்தியாரே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களை செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் நடிகர் கார்த்தி 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகளும் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அதன் பின்னர் கார்த்தியின் 28 வது திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
பின்னர் நடிகர் கார்த்தி பிஎஸ் மித்ரன் இயக்கத்தின் சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சர்தார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது வருகிறது.
அதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் எச் வினோத் இயக்க இருக்கும் தீரன் அதிகாரம் இரண்டு திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2 திரைப்படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார் கார்த்தி.