Homeசெய்திகள்சினிமாவந்தியத்தேவன், குந்தவையாக மாறிய கார்த்தி மற்றும் திர்ஷா

வந்தியத்தேவன், குந்தவையாக மாறிய கார்த்தி மற்றும் திர்ஷா

-

வந்தியத்தேவன், குந்தவையாக மாறிய கார்த்தி மற்றும் திர்ஷா
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 29ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

திரிஷாவின் குந்தவை கதாபாத்திர தோற்றம், கார்த்தியின் வந்தியத்தேவனின் கதாபாத்திரத் தோற்றம் அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு ‘அக நக’ பாடல் வெளியீடு என படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை படக்குழு செய்துவரும் நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் திரிஷா ட்விட்டர் பக்கத்தில் வந்தியத்தேவனாகவும் குந்தவையாகவும் தனித்துவமான ப்ரமோஷனில் ஈடுபட்டுள்ளனர்.

முதலில் ‘இளையபிராட்டியே… hi’ என திரிஷாவை அழைத்த கார்த்திக்கு குந்தவை எந்த பதிலும் அளிக்கவில்லை, மீண்டும் கார்த்தி ‘என்ன பதிலே இல்லை?’ என சோகமாக பதிவிட, உடனே அதற்கு ‘என்ன வாணர்குல இளவரசே?’ என திரிஷா பதிலளித்தார். இப்படியே மாறி மாறி டிவிட்டரில் பேசி ப்ரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ