Homeசெய்திகள்சினிமாதிருமணத்திற்கு பிரதமரை அழைத்த வரலட்சுமி... திருமண கொண்டாட்டம் தொடக்கம்...

திருமணத்திற்கு பிரதமரை அழைத்த வரலட்சுமி… திருமண கொண்டாட்டம் தொடக்கம்…

-

விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். இத்திரைப்படத்தின் வரலட்சுமியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. தொடர்ந்து விக்ரம் வேதா, சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதில் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.
வில்லி வேடத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வரலட்சுமிக்கு அடுத்தடுத்து வில்லியாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. விஷால் நடித்த சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்திருப்பார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே, வரலட்சுமிக்கும், அவரது காதலரும் தொழில் அதிபருமான நிகேலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், திருமண கொண்டாட்டங்கள் சென்னையில் தொடங்கி உள்ளன. வரலட்சுமியின் வீட்டிற்கு வருகை தந்த வருங்கால மாப்பிள்ளையை ராதிகா, மாலை அணிவித்து வரவேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடியை குடும்பமாக சென்று அழைத்துள்ளனர்.

MUST READ