ரஜினி நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினி கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். ரஜினியின் 170வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். எஸ் ஆர் கதிர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் ரஜினி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படமானது ஆக்சன் காட்சிகள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் மனசிலாயோ எனும் முதல் பாடல் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.