“பிச்சைக்காரன் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த ‘பிச்சைக்காரன்‘ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.
காவியா தாபர், மன்சூர் அலிகான் , விஜய் தேவ், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 3 நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது.
காதல், செண்டிமெண்ட், காமெடி, மாஸ் என அனைத்து காட்சிகளிலும் விஜய் ஆண்டனி மாஸ் காட்டியிருக்கிறாராம். விஜய் ஆண்டனி தன் முதல் இயக்கத்திலேயே ரசிகர்களை மனதை வென்றுள்ளார். விஜய் ஆண்டனியின் இசை,எடிட்டிங், ஒளிப்பதிவு இவை அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 3 படம் உருவாக இருப்பதாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்படம் பிச்சைக்காரன் 1 மற்றும் பிச்சைக்காரன் 2 மாதிரி இல்லாமல் வித்தியாசமான கதையில் இருக்கும் எனவும் இப்படம் 2025-ல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.