நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்துள்ளார். நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு ஆயிரம் நபர்களுக்கு விஜய்யின் கையால் அரிசி, காய்கறி, கோதுமை, ரவை போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கும் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கும் வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களுக்கும் நிதித்தொகை வழங்கப்பட்டது.
விஜயை பார்த்த உற்சாகத்தில் அங்குள்ள பொதுமக்கள் பலரும் விஜயுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். அச்சமயத்தில் மூதாட்டி ஒருவர் உற்சாகத்துடன் நிவாரண பொருட்களை வாங்க வரும் பொழுது விஜய் அருகில் இருப்பதை கவனிக்காமல் யாருப்பா விஜய் யாருப்பா விஜய் என்று குழம்பினார். அப்போது விஜய் அந்த மூதாட்டி இடம் நான்தான் விஜய் என்று சொல்ல, அம்மூதாட்டி விஜயின் கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டார்.
#தூத்துக்குடி மற்றும் #நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளபதி @actorvijay அவர்கள் இன்று #நெல்லையில் உள்ள மாதா மாளிகையில்,
• தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக,
காய்கறிகள், அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, ரவை, சேமியா உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும்… pic.twitter.com/uinfB5hZnN
— Bussy Anand (@BussyAnand) December 30, 2023
இன்னொரு பக்கம் இளம்பெண் ஒருவர் விஜயுடன் இணைந்து செல்ஃபி எடுத்த பிறகு நிவாரணப் பொருட்களே வேண்டாம் என குஷியாக ஓடுகிறார்.
இது போன்ற பல சுவாரசியமான நிகழ்வுகள் அந்நிகழ்ச்சியில் நடைபெற்றன. அதுமட்டுமில்லாமல் அங்குள்ள இளைஞர்கள் அனைவரும் திரண்டு நிற்க அவர்களுடன் இணைந்து விஜயையும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இது சம்பந்தமான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.