Homeசெய்திகள்சினிமாதுபாய் புர்ஜ் கலீஃபாவில் ஜொலித்த மகாராஜா போஸ்டர்... புரமோசன் பணிகள் தீவிரம்....

துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஜொலித்த மகாராஜா போஸ்டர்… புரமோசன் பணிகள் தீவிரம்….

-

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் நடிகர் என்ற அடையாளத்தை பெற்றிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார். தற்போது ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியானது. தமிழ் மற்றும் இந்தி மொழியில் வௌியான இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனிடையே, விஜய் சேதுபதி தனது 50-வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு மகாராஜா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
https://x.com/i/status/1798705649226027177
இத்திரைப்படத்தை, குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அம்மு அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்திற்கான புரமோசன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் மகாராஜா போஸ்டர் ஜொலித்தது. இதைக் காண படக்குழுவினர் துபாய் பறந்தனர்.

MUST READ