நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர், இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது கடைசியாக இருகப்பற்று, ரெய்டு போன்ற படங்களில் நடித்திருந்தார் விக்ரம் பிரபு. இதன் பின்னர் தெலுங்கில் அறிமுகமாகியுள்ள விக்ரம் பிரபு, அனுஷ்காவுடன் இணைந்து காட்டி எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே சமயம் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகி வருகிறார் விக்ரம் பிரபு. அந்த வகையில் இவர், ஏற்கனவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. அடுத்ததாக இவர், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (பிப்ரவரி 12) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இந்த படத்தை இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் நாளை வெளியாகும் போஸ்டரில் குறிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.