Homeசெய்திகள்சினிமாடைரி பட இயக்குநருடன் இணையும் விக்ராந்த்... அடுத்த படம் ரெடி...

டைரி பட இயக்குநருடன் இணையும் விக்ராந்த்… அடுத்த படம் ரெடி…

-

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் தளபதி விஜய்யின் சகோதரரும் ஆவார். தமிழில் 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே கவனமும் ஈர்த்தார். இதையடுத்து முத்துக்கு முத்தாக திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குணச்சித்திர வேடமாக இருந்தாலும், படத்தில் விக்ராந்தின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. தொடர்ந்து கோரிப்பாளையம், விஷால் நடித்த பாண்டியநாடு, விஜய் சேதுபதி நடித்த கவண், உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்

தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளது

அண்மையில் விக்ராந்த் குறித்த செய்திகள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், லால் சலாம் படத்தைத் தொடர்ந்து விக்ராந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. டைரி பட இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் விக்ராந்த் நடிக்கிறார். தற்போது இவர் இயக்கி வரும் புல்லட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ