மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியாா் வெங்கடேஷ் சர்மா வடவள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, வெள்ளி வேலையும் பறிமுதல் செய்தனா்.கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் சாமியார் ஒருவர் வெள்ளி வேலை திருடியுள்ளாா். இதுகுறித்து, வடவள்ளி காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் காவலா்கள் வழக்கு பதிவு செய்தாா்கள். தனியாருக்கு சொந்தமான மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியாரை சி.சி.டி.வி. காட்சிகளை கைபற்றியதன் மூலம் விசாரித்தனர். போலீசார் இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் கைப்பற்றும் முயற்சியின் முதற்கட்டமாக, வெள்ளி விற்பனை செய்யப்படும் பகுதிகளில் தீவிரமாக தேடியதாக சொல்லப்படுகின்றது.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில், பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மாவை கைது செய்து வெள்ளி வேலை போலீசார் மீட்டனா். சாமியார் வெங்கடேஷ் சர்மா வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருக்கிறானா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்