Homeசெய்திகள்க்ரைம்ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

-

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர்   “ஏ கே 47” ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்(55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஆவடி விமானப் படையில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார்.

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

இவரது மனைவி ஜீவஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். காளிதாஸ் கடந்த இரு தினங்களாக, 8ம் எண் கொண்ட விமானப்படை டவரில் பணியாற்றி வந்தார்.

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

இந்நிலையில், இன்று அதிகாலை, 3:55 மணியளவில், பணியில் இருந்த போது, அவர் பயன்படுத்தி வந்த ‘ஏ. கே. 47’ ரக கை துப்பாக்கியால், தொண்டையில் தனக்கு த்தானே சுட்டுக்கொண்டதில் மூன்று தோட்டக்கள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

திருநின்றவூர்: இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த  இளைஞர் கைது!

அவரை மீட்ட விமானப்படையினர் இது குறித்து  ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

தகவலின் அடிப்படையில் ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ