Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 5 பேரை விசாரிக்க அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 5 பேரை விசாரிக்க அனுமதி

-

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.

போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூந்தமல்லி கிளை சிறையில் உள்ள பொண்ணை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகிய ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

7 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் அனுமதி அளித்ததை அடுத்து பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரையும் அழைத்துச் சென்றனர்.

MUST READ