Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... பால் கனகராஜிடம் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பால் கனகராஜிடம் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு

-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் பால்கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக 2வது முறை சமன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக செம்பியம் தனிப்படை போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர்.இந்த நிலையில், வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகரான வழக்கறிஞர் பால் கனகராஜிடம் விசாரணை மேற்கொள்வதற்காக செம்பியன் தனிப்படை போலீசார் இன்று சமன் அனுப்பினர். இதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணி அளவில் வழக்கறிஞர் பால் கனகராஜ் விசாரணைக்காக சென்னை ராஜரத்தினம் மைதானம் பின்புறமுள்ள புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆஜரானார்.

போலீஸ் கண் முன் கணவனுக்கு மனைவி போஸ்ட் மார்ட்டம்

அவரிடம் செம்பியம் தனிப்படை போலீசார் 7 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பால் கனகராஜின் தொலைபேசி கால் ரெக்கார்டர் மற்றும் தொலைபேசியின் தரவுகளை ஆராய்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நாளை காலை பால்கனகராஜ் இடம் மறுபடியும் விசாரணை மேற்கொள்வதற்காக இரண்டாவது முறை சமன் அனுப்ப செம்பியம் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

MUST READ