Homeசெய்திகள்க்ரைம்ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

-

 

ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில், 3வது மாடியில் வசித்து வந்தவர் அசோக் குமார், 31. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 ம் அணியில் காவலராக பணியாற்றி வந்தார்.

பரந்தூர் போராட்டக்காரர்கள் கைதுக்கு கண்டனம் – டி.டி.வி.தினகரன்

கடந்த 30ம் தேதி முதல் இவர் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் திருமுல்லைவாயில் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அசோக் குமார்,  மின் விசிரியின் கொக்கியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இறந்து இரண்டு நாள் ஆனதினால், துர்நாற்றம் வீசியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும்  சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

MUST READ