Homeசெய்திகள்க்ரைம்தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

-

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது

மீஞ்சூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி மாநில முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

இதனைதொடர்ந்து தொழிலதிபர் ஜெயபிரகாஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனை தேடி வந்த நிலையில், பெங்களூரில் இருந்து காரில் வந்த அவரை பூந்தமல்லி காவல் துறையினர் நசரத்பேட்டையில் கைது செய்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் கைது 

கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய நிலையில், மீஞ்சூர் காவல் நிலையத்தில் வைத்து 2 மணி நேரம் விசாரணைக்கு பின் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

துப்பாக்கி காட்டி தொழிலதிபரை மிரட்டிய அஸ்வத்தாமன், சென்னையில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ