Homeசெய்திகள்க்ரைம்போதை மாத்திரை விற்பனை - இருவர் கைது

போதை மாத்திரை விற்பனை – இருவர் கைது

-

வடபழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போதை மாத்திரை விற்பனை - இருவர் கைது

இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஒட்டகபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் புகுந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு போதை மாத்திரை விற்பனை நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

வாட்ஸ் ஆப் குழு அமைத்து நூதனமான முறையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது சிதம்பரம் (வயது29) மற்றும் அவனது கூட்டாளியான கே.கே நகரை சேர்ந்த தர்ஷன் (வயது27) என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தங்கம் விலையில் அதிரடி மாற்றம்

மேலும் அவர்களிடம் இருந்து 450 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. எங்கிருந்து போதை மாத்திரை வாங்கி வருகின்றனர். இதன் பின்னணியில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து பிடிபட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ