Homeசெய்திகள்க்ரைம்ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி! தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு ஓடிய காதலன்

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி! தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு ஓடிய காதலன்

-

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி!  தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு ஓடிய காதலன்
அபிநயா

சாலை விபத்தில் ரத்தவெள்ளத்தில் காதலி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள பைக்கில் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்து இருக்கிறார் காதலன் . இப்படியும் ஒரு காதலனா? என்று போலீசார் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதே நேரம், விபத்து அல்லாமல் கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், பெரம்பலூர் மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த அபிநயா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் பார்த்திபனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த அபிநயா பார்த்திபனிடம் செல்போனில் பேசி கதறி இருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி!  தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு ஓடிய காதலன்
பார்த்திபன்

அப்போது அபிநயாவை சமாதானப்படுத்துவதற்காக அவரை பைக்கில் வைத்து அழைத்துச் சென்றிருக்கிறார் பார்த்திபன். திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டையில் பைக் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்களை காப்பாற்ற யாரும் இல்லாததால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காதலி அபிநயாவை அங்கேயே விட்டுவிட்டு , தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள பைக்கை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் பார்த்திபன். பின்னர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் அபிநயா.

அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க , அபிநயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். பின்னர் நடத்திய விசாரணை விசாரணையில் தான், நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்திருக்கிறது . பார்த்திபனை பிடித்து விட்ட போலீசார் அவர் சொல்வது எல்லாம் உண்மைதானா? இல்லை , தனது திருமணத்திற்கு தடையாக இருப்பார் என்று நினைத்து அவரை சமாதானம் பேச வேண்டும் என்று அழைத்து கொலை செய்து விட்டு சாலை விபத்தில் இறந்துவிட்டதாக நாடகமாடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது போலீசாருக்கு. இதனால் பார்த்திபனிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ