Homeசெய்திகள்க்ரைம்வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் - சோகத்தில் முடிந்த வாழ்க்கை

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் – சோகத்தில் முடிந்த வாழ்க்கை

-

இரண்டு குழந்தைகளை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று ஓடிப்போன பெண்ணின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துப் போனது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் - சோகத்தில் முடிந்த வாழ்க்கைநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரியில் முகம் சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் சடலமாக இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு ராசிபுரம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும் கொலைக்கு காரணமான கள்ளக்காதலன் பாலாஜி(எ) பாலசுப்பிரமணியன் என்றும் முதல்கட்ட விசாரணையில் கண்டுப்பிடித்து கைது செய்தனர்.

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் - சோகத்தில் முடிந்த வாழ்க்கை

எரித்து கொலை செய்யப்பட்ட மணிமேகலை ஏற்கனவே திருமணம் ஆனவர். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவரிடம் நிஷா(8), பவ்யா (5) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

மணிமேகலை மற்றும் குழந்தைகளை வடுக முனியப்பன் பாளையம் அருகே குச்சி காடு எனும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து தங்க வைத்துள்ளார் ரமேஷ்.

ஏற்கனவே திருமணம் ஆகி குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ரமேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மணிமேகலை (29) வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

திருமணம் செய்து இரண்டு குழந்தைக்கு தாய் ஆனாலும் கணவன் அருகில் இல்லாததால் மன வேதனையில் தவித்து வந்தால் மணிமேகலை.

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் - சோகத்தில் முடிந்த வாழ்க்கை

இந்த நிலையில் குச்சிக்காடு பகுதியில் அங்கன்வாடியில் மேஸ்திரி ஆக பாலாஜி என்பவர் பணி புரிந்து வந்தார். அங்கே மணிமேகலையும் கூலி வேலை செய்து வந்தார். இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொள்வதும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர். இதை அறிந்த ரமேஷ் இருவரையும் கண்டித்தும் இருக்கிறார்.

ஆனாலும் கள்ளத்தொடர்பை மணிமேகலை கைவிட மறுப்பதால் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி இரண்டு பெண் குழந்தைகளையும் விட்டுட்டு மணிமேகலை மாயமானதாக நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ரமேஷ் மேலும் ஒரு புகார் அளித்துள்ளார்.

இதனிடையே கள்ளக்காதலன் பாலாஜியும் மணிமேகலையும் ஆத்தூர் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பாலாஜியும் எப்பவாவது ஒரு முறை மணிமேகலை வீட்டிற்கு வருவது, போவதுமாக இருந்துள்ளார். இந்த கொடுமையை ரமேஷிடம் அனுபவித்த மணிமேகலை மீண்டும் பாலாஜிடம் அனுபவிக்க விரும்பவில்லை. பாலாஜியை நிரந்தரமாக தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

விதிகளை மீறிய ஜோடி போலீசார் அபராதம்

மணிமேகலை தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து பாலாஜியிடம் வற்புறுத்தி இருக்கிறாள். பாலாஜியும் ஏற்கனவே திருமணம் ஆனவர். எனக்கு குழந்தைகள் உள்ளது திருமணம் செய்ய முடியாது என கூறி உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் மணிமேகலை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், உன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தே தீர வேண்டும் என வற்புறுத்தி வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தார்.

சரி நேரில் வா பேசிக் கொள்ளலாம் என அழைத்து வந்து பட்டணம் ஏரி பகுதியில் என்னால் குடும்பத்தை விட்டு பிரிந்து வர முடியாது ஆனால் உன்னை எப்போதும் போல் பார்த்துக் கொள்கிறேன் என கூறியும் கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட மணிமேகலையை அருகில் இருந்த கல்லை எடுத்து முகத்தில் அடித்தேன். சற்று நேரத்திலேயே ரத்தப் போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள்.

அடையாளம் தெரியாமல் இருக்க பெரிய கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக பாலாஜி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். மேலும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து ஊற்றி எரித்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

கணவரை காலி செய்த மனைவி – வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

வாக்குமூலத்தின் அடிப்படையில் ராசிபுரம் காவல்துறையினர் பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று தவறான முடிவு எடுத்த பெண்ணின் வாழ்க்கை பரிதாபமான சோகத்தில் முடிந்தது.

MUST READ