Homeசெய்திகள்க்ரைம்போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை

போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை

-

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா, போலீஸ் காவலில் மேக்கப் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை

பெங்களூரு நகரில் கடந்த 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் காவலில் உள்ளனர். 13 நபர்களையும் போலீசார் கொலை நடந்ததாக கூறப்படும் பட்டனகரே என்ற பகுதியில் உள்ள கார் செட்டிற்கு அழைத்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று விசாரணை

இதைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனுக்கு சொந்தமான பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்தார். நடிகர் தர்ஷனின் மேலாளருக்கும் ரேணுகாசாமியின் தற்கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அவரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெற பெங்களூருவில் உள்ள வீட்டிற்கு பவித்ராவை போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை முடித்து வீட்டை விட்டு வெளியேவந்தபோது, லிப்ஸ்டிக் போட்ட முகத்தோடு சிரித்துக்கொண்டே வந்தது பேசுபொருளாகியுள்ளது.

MUST READ