Homeசெய்திகள்க்ரைம்5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

-

5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 27.05.2019 அன்று சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் 02.07.2024-ம் தேதி வழக்கின் விசாரணை முடிந்து போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

திரைப் பிரபலங்கள் பங்கேற்ற வரலட்சுமியின் திருமண வரவேற்பு……வைரலாகும் புகைப்படங்கள்!

இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு தண்டனை பெற்றுத்தர உதவிய காவல் நிலைய ஆய்வாளர் மகாலெட்சுமி மற்றும் நீதிமன்ற காவலர் பார்வதி (WHC 869) அவர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டியுள்ளார்.

MUST READ