Homeசெய்திகள்க்ரைம்பெயர் கேட்டாலே நடுங்கும்  ஆண்கள்… யார் அந்த  சொப்பன சுந்தரி ஹேமலதா?...

பெயர் கேட்டாலே நடுங்கும்  ஆண்கள்… யார் அந்த  சொப்பன சுந்தரி ஹேமலதா?…

-

- Advertisement -

காவல் நிலையம் அருகே கடை வைத்து கொடுத்து காவல் காக்க வைத்த அந்த எஸ்.ஐ யார் ,யார் அந்த  சொப்பன சுந்தரி ஹேமலதா பெயர் கேட்டாலே நடுங்கும்  ஆண்கள். போலீசாரிடம் சிக்குவாரா ?…பார்ப்போம்…பெயர் கேட்டாலே நடுங்கும்  ஆண்கள்… யார் அந்த  சொப்பன சுந்தரி ஹேமலதா?...

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு கோமளா மகள் ஹேமலதா – இவர் குடும்பம் திருவள்ளூர் மாவட்டம் பிரயாங்குப்பத்திற்கு குடி பெயர்ந்துள்ளனர்,அப்போது ஹேமலதா திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படிக்கும் போது தன் எதிர் வீட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான இளங்கோவின் காதல் வலையில் விழுந்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ,இவர்களுக்கு  பெண் குழந்தை பிறந்துள்ளது, பின்னர் சென்னைக்கு கம்ப்யூட்டர் கோச்சிங் கிளாஸ் சென்றபோது அவருக்கு திருச்சி பகுதியில் சேர்ந்த இளைஞர் விக்கியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்தத் தொடர்பு கள்ளக்காதலாக மாறி உள்ளது .இது கணவன் இளங்கோவுக்கு தெரிய வரவே மனைவி ஹேமலதாவை கண்டித்துள்ளாா். நாளடைவில் ஹேமலாதாவின் செயல்பாடு சரி இல்லாததால் அவரிடமிருந்து இளங்கோ தனது  பெண் குழந்தையுடன் பிரிந்து சென்று வேறொரு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார், இரண்டாவது கணவராக ஹேமலதா தன்னை விட வயது குறைவான விக்கி ஏன்ற நபரை திருமணம் செய்துள்ளாா். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர் திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும்போது ரயில் டிக்கெட் பரிசோதகரின் நட்பு கிடைத்துள்ளது. அந்த நட்பு நாளடைவில் அறை  வரை கொண்டு சென்றுள்ளது, இது விக்கிக்கு தெரிய வரவே அவரை கண்டித்துள்ளர். இதனால் ஹேமலதாவுக்கும் விக்கிக்கும் வாழ்கையில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து விக்கி ஹேமலதாவை தனது வீட்டில் சேர்க்கவில்லை என கூறப்படுகிறது.

இதனார், ஹேமலதா தனது கணவர் வரதட்சணை கேட்டு ,கஞ்சா போதையில் தாக்கி கொடுமை செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் மனைவியால் மது போதைக்கு அடிமையாகி சாலை விபத்தில் சிக்கி இரண்டாவது கணவர் விக்கி உயிரிழந்து விடுகிறார்,அதன் பிறகு ஹேமலதா தனது அப்பா அம்மா குடியிருக்கும் திருவள்ளுர் மாவட்டம் பிரயாங்குப்பத்திற்கே வந்துள்ளார்.பின்னர் அவர் திருவள்ளுர் சுற்றுவட்டார  பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகாத இளைஞர்களுடன் காதல் செய்வது போன்று நடித்து  இருவரும் தனிமையில் இருக்கும் வீடியோ போட்டோ ஆடியோவை எடுத்து வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர்.

தான் வலையில் சிக்காத ஆண்கள் மீது ஹேமலதா காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற போது அங்குள்ள காவலர்களையும் தன் இச்சைக்கு ஆளாக்கி அவர்களையும் தன் வலையில் சிக்க வைத்து வந்துள்ளார், இதனால் காவலர்களையும் தன்னிடம் இருந்த வீடியோ ஆடியோ வெளியிட்டிடுவேன்   என மிரட்டி தான் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வைத்துள்ளார்,அப்போது போலீஸார்கள் தான் கண்ட்ரோலுக்கு ஹேமலதா கொண்டு வந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய கீழ் மட்ட காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை இதனால் அவருக்கு அறிமுகம் கிடைத்துள்ளது,தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தல் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல்  இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தனக்கு நாக தோஷம் இருப்பதாகவும் திருமணமான ஆணுடன்  திருமணம் செய்து கொண்டால் நாகதோஷம் கழிந்து விடும் என கூறி சில திருமணமான ஆண்களுடன் பழகி தனது திருவிளையாட்டை காட்டத் தொடங்கியுள்ளார்,அதுமட்டுமின்றி ஹேமலதா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு நடைபெறும் பார்ட்டியில் கலந்து கொண்டு பெரிய பெரிய தொழிலதிபர்கள் உடன் நடனமாடியும் அறையில் இரவு கழித்து வந்துள்ளார்.

பெயர் கேட்டாலே நடுங்கும்  ஆண்கள்… யார் அந்த  சொப்பன சுந்தரி ஹேமலதா?...

இதனால் அவருக்கு பெரிய பெரிய அளவில் நெட்வொர்க் கிடைத்துள்ளது,அவர்களை ஹேமலதா ரகசியமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளர். தனது மிரட்டலுக்கு பணியாத ஆண்கள் மீது   காவல் துறையில் புகார் அளித்துள்ளார், அப்படி புகாருக்கு சென்ற ஹேமலதா திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் சைபர் கிரைமில்  – வில் தொடங்கும்  பெயர் கொண்ட உதவி ஆய்வாளரும் அவர் வலையில் சிக்க வைத்துள்ளார்,அவரிடமும் நட்பாக பழகி தனிமையில் இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்துள்ளார், அந்த சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் அந்தப் பெண் கொடுக்கும் புகாரை உடனடியாக எஃப் ஐ ஆர் பதிவு செய்து அவர்களை கண்காணிக்க சொல்லி உத்தரவு விட்டு உள்ளார்.

அந்த உத்தரவின் பேரில் சைபர் கிரைம் எஸ்ஐ, ஹேமலதா ஆதரவாக அவர் கொடுக்கும்  புகாருக்கு  கண்காணித்து அவர்களின் செல்போன் உரையாடல்கள் மெசேஜ் அனைத்தும் விவரங்களையும் சேகரித்தும் மிரட்டி வந்துள்ளார்,  அதேபோன்று திருவள்ளூர் எஸ் பி வாகன ஓட்டுனர்  திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கடவுள் பெயர் கொண்ட உதவிக்காவல் ஆய்வாளரும் மற்றும் ச – வில் தொடங்கும் முன்னாள் துணைக் கண்காணிப்பாளர் இடமும் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டு போலீசாரே தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார், ஒரு கட்டத்தில் தன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க  கூடும் என்பதை அறிந்த அவர்  முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவு மீது புகார் அளித்து லாக் செய்துள்ளார்.

தான் வலையில் சிக்காத ஒரு ஆண் மீது கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு புகார் அளிக்க ஹேமலதா சென்றுள்ளார். சென்ற இடத்தில்  இதற்கு முன் தான் பணியாற்றி வந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு அவர் பெற்றோரிடம் காலில் விழுந்து கெஞ்சாத அளவில் பேசி வீடியோவில் வைரலாகி முதல்வரிடம் பாராட்டு பெற்ற உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கடவுள் பெயர் கொண்ட  எஸ் ஐ உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி அந்த எஸ் ஐ உடன் சல்லாபத்தில் ஈடுபட்ட ஹேமலதா ஒரு கட்டத்தில் எஸ்ஐயும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார், அவருடைய போட்டோ வீடியோக்களும் எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளார், பணம் கொடுக்காததால் அவர் மீது ஹேமலதா புகார் கொடுக்கப்பட்டு அந்த புகார் பின்னர் போலீஸ் உயர் அதிகாரி மூலமாக வைத்து சமரசம் செய்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அத்தகைய சமரசம் செய்து வைப்பதற்கு அந்தப் பெண்மணிக்கு கடம்பத்தூர் காவல் நிலையம் அருகே ஜூஸ் கடை வைத்து கொடுத்து காவல் காக்க வைத்துள்ளார் அந்த உதவி ஆய்வாளர்.

அத்தகைய ஜூஸ் கடையில் பிரயாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜெயந்தன் என்ற இளைஞருடன் ஹேமலதா இனைந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். ஒரு நாள் அந்த ஜூஸ் கடைக்கு கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ராமன் கோயில் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் விஷாலியுடன் சென்றுள்ளார்,அப்போது ஜூஸ் குடிக்க சென்ற இடத்தில் தனது பள்ளிப் பருவ கால நண்பனான ஜெயந்தனை பார்த்து பேசி உள்ளார், அப்போது தனது கணவர் சென்னை தலைமைச் செயலகத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருவதாகவும் தனது கஷ்டத்தை தனது நண்பரிடம் பகிர்ந்துள்ளார் நண்பரும் பதிலுக்கு தன்னுடைய கஷ்டத்தை அவரிடம் பகிர்ந்துள்ளார்,பெயர் கேட்டாலே நடுங்கும்  ஆண்கள்… யார் அந்த  சொப்பன சுந்தரி ஹேமலதா?...தனது தாய் இறந்துவிட்டதாகவும் தந்தை குடிகாரராக இருப்பதாகவும் சாப்பிடுவது கூட கஷ்டமாக உள்ளதாகவும் இதனால் நைசாக பேசி  விசாலியை தனது வீட்டிற்கு வர வைத்துள்ளார் ஜெயந்தன். அப்போது விஷாலியை தனக்கு யாரும் இல்லை உன் மடியில் சாய்ந்து கொள்ளட்டுமா என கேட்டு சாய்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது விஷாலி வீட்டுக்கு வந்து சென்றதை வீடியோவாக ஜெயந்தன் பதிவு செய்துள்ளாா். உன்னுடைய கணவருக்கு இந்த வீடியோ அனுப்பி விடுவேன் என மிரட்டி தனது இச்சைக்கு  அழைத்துள்ளார்.வேறு வழியின்றி விஷாலி அவர் வீட்டுக்குச் சென்று அவருடைய ஆசையை நிறைவேற்றி உள்ளார், அப்போதுதான் காத்திருந்தது விசாலிக்கு அதிர்ச்சி ஏற்கனவே ஜெயந்தன் தனது காதலி ஹேமலதாவிடம் சொல்லி வைத்திருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

அங்கு வந்த ஹேமலதா தான் திருமணம் செய்யக் கூடிய அவனிடம் பழகுவதா என கூறி நிர்வாணம் புகைப்படம் எடுத்து இரண்டு பேரும் சேர்ந்து விசாலியை தாக்கி அவருடைய கணவரின் போன் நம்பரை வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர்  அவர் கணவரிடம் உங்கள் மனைவி பற்றி பேச வேண்டும் என ஹேமலதா ஜெயந்தன் இருவரும் சேர்ந்து அவரை கடம்புத்தூர் ரயில்வே மேம்பாலம் கீழே வரவைத்து மனைவியின் நிர்வாண  வீடியோ காட்டி  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிடுவேன் எனவும் அதற்கு பணம் அல்லது இரண்டு சவரன் நகை கொடுங்கள் என இருவரும் இணைந்து மிரட்டி உள்ளார்,பணம் தரவில்லை என்றால்  ஜெயந்தன் வீட்டிலிருந்து நகையை திருடி வந்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிப்பதாக வைசாலி கணவரிடம் ஹேமலதா கூறியுள்ளார்.

ஏற்கனவே தன் மனைவியிடம் நடந்த விவரங்களை கேட்டு அறிந்த அவர் தான் மனைவி தவறு செய்யாத போது அவர் மீது நீங்கள் என்ன புகார் அளிப்பது உங்கள் மீது தான் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து பதறிப் போன ஹேமலதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்கூட்டியே புகார் அளித்துள்ளார், இது தொடர்பாக விஷாலி  கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தன் பேரில்  அந்தப் புகாரை திருவள்ளுர் தாலுகா போலீசாரை விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்,அந்தப் புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் ஜெயந்தன் மற்றும் ஹேமலதா மீது ,அடித்து காயத்தை ஏற்படுத்தியது, தவறாக அடைத்து வைத்து தாக்குதல் செய்தது, மிரட்டி பணம் பறிக்க முயன்றது, தொடர்ச்சியாக பெண்ணை பின் தொடர்ந்து மிரட்டியது, செயின் பறிப்பு செய்தது, உள்ளிட்ட 8  பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹேமலதா மற்றும் அவரது ஆண் நண்பர் ஜெயந்தனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் ஹேமலதா கிட்ட பல போலீசாரின் ரகசியங்கள் வைத்திருப்பதால் அவரை கைது செய்தால் துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திவிடும் என எண்ணி கைது செய்யாமல் தலைமறைவாக இருந்து முன் ஜாமின் பெற்றுக் கொள்ளுங்கள் என விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளரிடம் கேட்டபோது விரைவில் ஹேமலதா கைது செய்யப்படுவார் என தகவல் தெரிவித்துள்ளார்,

இதுவரை ஹேமலதா தனது கட்டுப்பாட்டுக்கு வராத ஆண்கள் மீது  204 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல் தெரிய வருகிறது, பல ஆண்களையும் போலீசாரையும் தன் வலையில் சிக்க வைத்து அந்தரங்க வீடியோவை எடுத்து மிரட்டி தலைமறைவாக இருந்து வரும் திருவள்ளூர் சொப்பன சுந்தரி ஹேமலதா போலீசாரிடம் சிக்குவாரா பார்ப்போம்.

தனியார் வங்கி ஊழியாின் சாதுர்யமான கைவாிசை! போலீசாரின் தீவிர வேட்டை

MUST READ