Homeசெய்திகள்க்ரைம்ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்

ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்

-

ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்

செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்கிற சீர்காழி சத்யா (41), இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிலுவையில் உள்ளது.

திருப்பதியில் முடி காணிக்கை அளித்த பிரபல பாடகி பி.சுசீலா

காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியான சீர்காழி சத்யா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பல்லாவரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். அப்போது வட நெம்மேலி செக் போஸ்டில் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் சத்யாவின் காரையும் மடக்கி சோதனையிட்டுள்ளனர்.

அப்போது சீர்காழி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கல்பட்டு அருகே பழவேழி பகுதியில் உள்ள மலையில் தனது கூட்டாளிகள் இருப்பதாக கூறியதன் அடிப்படையில் போலீசார் சீர்காழி சத்யாவை அழைத்துக் கொண்டு பழவேலி மலைக்கு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு சீர்காழி சத்யா தப்பியோட முயற்சித்துள்ளார். இதனால் போலீசார் சீர்காழி சத்யாவின் மீது ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதில் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் சீர்காழி சத்யா தாக்கியதில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ரஞ்சித்துக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு அருகே காவலர்களால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி சீர்காழி சத்யா , மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகள் வார்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள சீர்காழி சத்யா பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ