இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை மதுரையில் அதிர்ச்சி
முன்விரோதம் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இளைஞரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் பொழுது இரு கோஷ்டிகளுக்கு இடையே கடுமையான மோதல் என்பது நடைபெற்றுள்ளன.
வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி
இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஆனந்த குமார் என்பவரை மதுரை மீனாட்சி திரையரங்கு பகுதியில் ஓட ஓட விரட்டி 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி தப்பி விட்டு சென்றுவிட்டனர்.
ஆனந்தகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார். இதனையறிந்த தெற்கு வாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பணிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் எதற்காக இந்த கொலை நடந்துள்ளது பற்றி பல்வேறு தரப்புகளில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.