Homeசெய்திகள்க்ரைம்பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய பணிப்பெண்கள்

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய பணிப்பெண்கள்

-

கோவையில் உள்ள பிரபல நடிகை வீட்டில் திருடிய பணிப்பெண்கள் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய பணிப்பெண்கள்

கோவை வடவள்ளி மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் நடிகை அதுல்யா ரவி. இவர் காதல் கண் கட்டுதே, கதாநாயகன், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகை அதுல்யா ரவி திரைப்படங்களில் நடித்து வருவதால் பெரும்பாலும் சென்னையில் வசித்து வருகிறார்.

கோவையில் உள்ள அவரது வீட்டில் தந்தை ரவி மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த செல்வி (46) என்ற பெண் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதுல்யா ரவியின் வீட்டில் இருந்து அடிக்கடி பணம் மாயமாகி வந்தது.

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய பணிப்பெண்கள்

எப்படி பணம் மாயமாகிறது என்பது குறித்து தெரியாமல் குழப்பத்தில் இருந்த அதுல்யா ரவியின் தாயார் விஜயலட்சுமி வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி விஜயலட்சுமி சென்னை சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் யாரும் இல்லை எனவே வழக்கம் போல தினமும் பராமரிப்பு பணிகளை பார்த்துக்கொள்ளுமாறு செல்வியிடம் கூறிச் சென்றனர். பின்னர் மீண்டும் கடந்த 30 ஆம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது படுக்கையறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த ரூ. 2,000 மற்றும் அதுல்யா ரவியின் பாஸ்போர்ட் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து விஜயலட்சுமி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் தனது வீட்டில் பணி செய்யும் செல்வி மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய பணிப்பெண்கள்

புகார் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவங்கினர். முதலில் பணிப்பெண் செல்வியை போலீசார் பிடித்து விசாரித்த போது அவருடன் அங்கு வந்தது தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷினி (40) என்பதும், இருவரும் சேர்ந்து அடிக்கடி அதுல்யா ரவியின் வீட்டில் திருடி வந்ததும் தெரியவந்தது.

மேலும் சம்பவத்தன்று திருடும்போது வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியும் பணம், நகை என எதுவும் கிடைக்காததால், ஆத்திரத்தில் அதுல்யா ரவியின் பாஸ்போர்ட்டையும் திருடியதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாஸ்போர்ட்டை அவர் தேடி அலையட்டும் என எண்ணி திருடியதாகவும், ஆனால் சிசிடிவி மூலமாக திருடியது தாங்கள் தான் என தெரிந்ததால் பாஸ்போர்ட்டை கிழித்து வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். நம்பி வேலைக்கு வைத்த பணிப்பெண்கள் பலமுறை திருடியது மட்டுமல்லாமல், அதிக பணம், நகை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் நடிகையின் பாஸ்போர்ட்டை கிழித்து வீசிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ