நள்ளிரவில் சாலைகளின் சுற்றி திரியும் மாடுகளை திருடும் கும்பல் – சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து ஒரு கும்பல் அதனை லோடு வேனில் கடத்திச் செல்கின்றது கடந்த பத்தாம் தேதி இரவு சத்துவாச்சாரி பகுதியில் கங்கை அம்மன் சாலையில் இருந்த மாடுகளை அந்த கும்பல் மடக்கிப் பிடித்து மினி வேனில் ஏற்றி கடத்திச் செல்கிறது இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன இதேபோன்று கடந்த ஒன்பதாம் மாதமும் பல்வேறு இடங்களில் இதே கும்பல் மாடுகளை திருடி உள்ளது இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இவர்களை தேடி வருகின்றனர்
முதற்கட்ட விசாரணையிலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மாடுகளை கடத்தி கர்நாடக மாநிலம் கே ஜி எஃப் பகுதியில் சென்று விற்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது கடந்த ஆண்டு இந்த கும்பலை போலீசார் நள்ளிரவில் மடக்கி துரத்திச் சென்றபோது இவர்கள் போலீசாரை தாக்கி விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை – இருவர் கைது