Homeசெய்திகள்க்ரைம்திருச்சி அருகே ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்

திருச்சி அருகே ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்

-

பிரபல ரவுடியான கலைப்புலி ராஜா சிறுகனூர் அருகே வலது காலில் சுடப்பட்டு உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி அருகே ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து விக்னேஷ் என்ற நபரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கலைபுலி ராஜா நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் களைப்புலி ராஜாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி சிறகினூர் அருகே கலைபுலி ராஜா சுற்றித் திரிவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது கலைப்புலி ராஜா காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.

திருச்சி அருகே ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்இதனை அடுத்து கலைப்புலி ராஜா வலது காலில் சுடப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது கலைபுலி ராஜா உயிருடன் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ