Homeசெய்திகள்க்ரைம்ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர் தற்கொலை

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர் தற்கொலை

-

 

 

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர் தற்கொலை

ஆவடி அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவர் மனவேதனையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

கடன் கொடுத்த ஆன்லைன் கும்பல் இறந்தவரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டியதாக கூறி இறந்தவர் இறக்கும் முன் உறவினர்களிடம் வாக்குமூலம்.

ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பாரதி நகர் 8ஆவது தெருவில் சத்ய நாராயணன்(எ) கார்த்தி-37 என்பவர் வாடகை வீட்டில் அவரது மனைவி விமலா தேவி(32), வர்ஷா(7), சிவக்குமார்(5) பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சத்யநாராயணனின் பெற்றோர் ரதி ராஜகோபால் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்,அதில் தனது மகன் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை செய்து வந்தார்,தனது மகன் ஆன்லைன் செயலி மூலம் ரூ₹100000 கடன் பெற்றுள்ளார்.

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற வாலிபர் தற்கொலை

 

பின்பு கடனை செலுத்த தவறியதால் பல எண்களிலிருந்து அவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்துள்ளது,மேலும் அவரது மனைவியின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் மன உளைச்சலில் இருந்து வந்த சத்தியநாராயணன் பூச்சி மருந்து உட்கொண்டு மயங்கிய நிலையில் இருந்தவரை அவரது மனைவி உறவினர்கள் உதவியுடன் பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று,மேல் சிகிச்சைக்காக போரூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து உள்ளார்.

எனவே தனது மகனின் இறப்புக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முத்தா புதுப்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் கடன் பெற்ற நபர் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனை – ஆளுநர் ஒப்புதல்

இறந்த சத்யநாராயணன் இறுதியாக மருத்துவமனையில், ஆன்லைன் மூலம் பணம் பெற்றதாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் இனி வாழவே முடியாது என இறுதி வாக்குமூலம் உறவினர்களிடம் வேதனையோடு கூறியதாக தெரிவித்தார்.

இது போன்று ஆன்லைன் மூலம் கடன் கொடுத்து மன உளைச்சலில் உயிரிழப்புகள் ஏற்படுவதால், இனி உயிரிழப்புகள் நிகழாமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இறந்த சத்திய நாராயணன் என்கிற கார்த்திக் குழந்தைகளுக்கு அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ