Homeசெய்திகள்மாவட்டம்ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

-

ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற ஜீலை 13 ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடை பெற உள்ளது.

ஜீலை 13ம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 குறு வட்டங்களில் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் நடக்க இருக்கிறது . இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது , திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வருகிற 13ம் தேதி  வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

ஜீலை 13ம் தேதி நடக்கிறது குடும்ப அட்டை குறைதீர் முகாம்

 

எனவே குறைதீர் முகாமில் பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்ய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து பயன்  பெறலாம் என அவர்  தெரிவித்துள்ளார்.

உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி, நான் முதல்வன் என்று இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள் – முதல்வர் பெருமிதம்

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை கடந்த ஜூன் மாதம் பெற தவறிய குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ