- Advertisement -
1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் தலைமறைவாகியுள்ளனர்.
சென்னை இராயபுரம் மீனாட்சியம்மன் பேட்டை குடிசைமாற்று வாரிய குடியுருப்பு பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் ஆனந்த் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்த பொழுது வீட்டில் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. பதுக்கி வைத்து இருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 748 ரூபாய் மதிப்புள்ள 144 வெளிநாட்டு மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மண்ணடியைச் சேர்ந்த முகமது பயாஸ் கான் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.