Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் கோர விபத்து - 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

கர்நாடகாவில் கோர விபத்து – 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

-

கர்நாடகாவில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு வேனில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததனர். ஹாவேரி மாவட்டம் பியாட்கி தாலுகாவில் உள்ள குண்டேனஹள்ளி குறுக்கு அருகே வேன் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேனில் சென்ற மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ