ஆந்திராவில் கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு மனைவிகளே ஏற்பாடு செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள குல்லேலு கிராமத்தைச் சேர்ந்த சகேனி பாண்டன்னா, தனது முதல் மனைவி பர்வதம்மாவை 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பாண்டன்னாவின் முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆகையால் அவர் 2007-ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி பர்வதம்மாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் அவரின் ஒப்புதலுடன் அப்பலாம்மாவை மணந்தார்.
அந்த தம்பதிக்கு ஒரு மகன் இருந்தும் அடுத்த குழந்தை பிறக்கவில்லை. பாண்டன்னா மற்றொரு குழந்தைக்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது, அவரது மற்ற மனைவிகள் அவரை மூன்றாவது பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டனர்.
பாண்டன்னா, கொல்லம்கோட்டா கிராமத்தில் உள்ள பந்தவீதியைச் சேர்ந்த லக்ஷ்மி என்றழைக்கப்படும் லவ்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
பர்வதம்மாவும், அப்பளம்மாவும் சம்மதித்தது மட்டுமின்றி, பாண்டன்னாவுக்கு மூன்றாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.