சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்க துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் , விழுப்புரம் ,புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிககனமழை முதல் அதிதகனமழையும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 3-ம் தேதி நடைபெறும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் நலனில் துணை முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – AVADI PRESS CLUB கோரிக்கை