Homeசெய்திகள்இந்தியாஎன்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!

என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!

-

 

என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!
File Photo

தோனி அரசியலுக்கு வர வேண்டும் என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

16 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ள நிலையில், அந்த அணிக்கும், கேப்டன் தோனிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!

அந்த வகையில், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என தான் விரும்புகிறேன். பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவர் பைஜயன் ஜெய் பாண்டாவின் தலைமையிலான என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். சுறுசுறுப்புடனும், பணிவாகவும் பணியாற்றுபவர். ஒரு தெளிவான எதிர்கால தலைவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ