Homeசெய்திகள்இந்தியாஉத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து -  10 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து –  10 பேர் உயிரிழப்பு

-

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடுக்கு மாடி வீடு இடிந்த விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்  ஜாகீர் நகரில் 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சனிக்கிழமை மாலை திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில அந்த கட்டிடத்தில் இருந்த 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

இதில் காயமடைந்த நிலையில் 15 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மீரட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ