
நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ. அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.
தேர்தல் ஆணையர்களை நியமிக்கத் தடைக் கோரி வழக்கு!
கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது. அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்துள்ளது.
ஏமாற்றம் அளித்த இந்திய அழகி… தட்டித் தூக்கிய செக் குடியரசு அழகி..!!
அதேபோல், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவில் குடியேறலாம். டிசம்பர் 2014- ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்னர் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த சமணர்கள், பௌத்தவர்களுக்கும் சி.ஏ.ஏ. பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.