விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தால் சிட்டி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?
தேவைக்கேற்ப விதிகளை மாற்றும் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து வருகிறது. அதன்படி, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாங்க் ஆஃப் பரோடாவுக்கு 4 கோடியே 34 லட்சம் ரூபாயும், சிட்டி வங்கிக்கு 5 கோடி ரூபாயும் அபராதமாக ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு, ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது.
இயக்குனராக மாறுகிறாரா நயன்தாரா?
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.