Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் ஒப்படைப்பு!

ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் ஒப்படைப்பு!

-

 

Rahul Gandhi

 

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவர் வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் வழங்கப்பட்டது.

தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயி

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து பேசிய தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,தண்டனைப் பெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் அவர் வசித்து வந்த அரசு பங்களாவை காலிச் செய்தார்.

இதனிடையே, ராகுல் காந்தியின் தண்டனையை உச்சநீதிமன்றம், நிறுத்தி வைத்ததால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக ராகுல் காந்தி வசித்து வந்த அரசுப் பங்களாவை அவருக்கு மக்களவைச் செயலகம் மீண்டும் வழங்கியுள்ளது.

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கிய படங்கள் என்னென்ன?

இதனால் ராகுல் காந்தி, அரசு பங்களாவில் விரைவில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ