Homeசெய்திகள்இந்தியாநாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் - அமித் ஷா

நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் – அமித் ஷா

-

நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் - அமித் ஷா
அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தி அலுவல் மொழி தினம் இன்று (செப்.14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள்!. அனைத்து இந்திய மொழிகளும் நமது பெருமை! நமது பாரம்பரியம்!. நாம் முன்னேற அவற்றை வளப்படுத்த வேண்டும்.

அலுவல் மொழி இந்தி ஒவ்வொரு இந்திய மொழியுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு , இந்தி மொழி நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

வக்பு வாரிய சட்டமசோதா – நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்த திருமாவளவன்

அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

MUST READ