Homeசெய்திகள்இந்தியாநடுரோட்டில் போலீசாரின் இடத்தில் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள்!

நடுரோட்டில் போலீசாரின் இடத்தில் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள்!

-

நடுரோட்டில் போலீசாரின் இடத்தில் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள்!

ஐதராபாத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய மாதாபூர் சந்திப்பு அருகே போக்குவரத்து போலீசாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்து மது அருந்தி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாதப்பூரில் உள்ள ஹைடெக் சிட்டி சந்திப்பு எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு. இங்கு போக்குவரத்து போலீசாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்து இரண்டு இளைஞர்கள் மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இதனை வீடியோ எடுத்த சிலர் சமூகவளைதலத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://twitter.com/TeluguScribe/status/1683695137355087872

இந்த பதிவை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், போலீசார் தனது கடமையை சரியாக செய்யவில்லை என்றும், ஐதரபாத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ