இந்தியாவில் கல்லீரல் உறுப்பு தானம் செய்வோர் அதிகரிப்பு
இந்தியாவில் உயிருடன் இருப்போர் கல்லீரல் உறுப்பு தானம் செய்வது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது கல்லீரல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு வேகமாக அதிகரித்து வருவதன் பலன் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
உடல் உள்ளுறுப்புகளையும் மீண்டும் வளரும் தன்மையை கொண்ட கல்லீரல் பிற உள்ளுறுப்புகளின் இயக்கவியலுக்கான அச்சாணி என்கிறார்கள் மருத்துவர்கள்.
அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவோர் மூளைச்சாவு அல்லது விபத்தில் இறந்தவர்களின் உறுப்பை பெற முன்பதிவு செய்வது கட்டாயமாகும் என்றாலும் கூட அதற்கு அதிகபட்சமாக 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் உயிருடன் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கல்லீரல் தானம் செய்ய முன் வருகின்றனர்.
இந்த கல்லீரல் விருப்ப மாற்று அறுவை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது என்றார்கள் மருத்துவர் நிபுணர்கள். இந்தியாவில் ஆண்டுக்கு நான்காயிரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
அது உயிருடன் இருப்பார் உறுப்பு தானம் செய்வது மேலை நாடுகளை விட இந்தியாவில் மிக அதிகம். 18 வயது முதல் 55 வயது வரை உள்ள சொந்த குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் நோயாளிக்கு கல்லீரல் தானம் செய்யலாம்.
கல்லீரலில் அதிகபட்சம் ஆறு சதவீதம் அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்படும். 6 வாரங்களில் வெட்டப்பட்ட கல்லீரல் முழுமையான வளர்ச்சியை எட்டி விடும்.
மறுபுறத்தில் கல்லீரல் புற்று நோயை விட ஃபேக்டிலிவர் எனப்படும் கொழுப்பு மிகு கல்லீரல் பிரச்சனை மிக மோசமானது என்கிறார்கள் மருத்துவர்கள். இது தொடர்பான விழிப்புணர்வும் உருவாக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.