உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்படுத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வி அடைந்த இந்திய வீரர்கள், மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். கேப்டன் ரோஹித் சர்மா, முகம்மது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர்விட்டனர்.
இதையடுத்து, சில நிமிடங்களில் இந்திய வீரர்களின் அறைக்கே பிரதமர் நரேந்திர மோடி சென்றார். கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறி ஆறுதல்படுத்தினார். அதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை அழைத்துப் பாராட்டினார்.
ஜடேஜா, கில், ஸ்ரேயாஸ், கில், பும்ரா போன்றோரை அழைத்து நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறிய பிரதமர், முகம்மது ஷமியின் பெயரைக் கூறி அழைத்து, தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்து, சிறப்பாக ஆடியதற்காகப் பாராட்டினார்.
சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் காலமானார்!
இந்திய வீரர்கள் அனைவரும் டெல்லி வரும் போது, சந்திப்பதாகவும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.