காஷ்மீரில் உறைப்பனி நிலவும் நிலையில், நாள்தோறும் 16 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!
காஷ்மீரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மிக நீண்ட நேரம் மின்வெட்டு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 17 மணி நேரம் முதல் 18 மணி நேரம் மின்விநியோகம் இல்லாமல் அவதியடைந்து வருவதாக, உள்ளூர் வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், வெப்பநிலையும் அங்கு பூஜ்ஜியம் டிகிரி செல்ஸியஸுக்கும் கீழ் சென்று பல பகுதிகளில் உறைபனி நிலவுகிறது. இதனால் மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர்களைப் பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மின்வெட்டைச் சரிசெய்யக் கோரி எதிர்க்கட்சிகள், வர்த்தக அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் போராடிய நிலையில், இதற்காக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவித்திருந்தது. இருப்பினும், மின்வெட்டு தொடரும் நிலையில், தேவை அதிகரித்துள்ளதும், மின் உற்பத்திக் குறைந்ததுமே மின்வெட்டுக்கு காரணம் என்று மின்சார வாரிய முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!
நாள்தோறும் 15 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கும் நிலையில், காஷ்மீரில் வசிக்கும் சுமார் 70 மக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.