Homeசெய்திகள்இந்தியாகெஜ்ரீவால் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

கெஜ்ரீவால் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

-

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கோரி பாஜகவினர் முற்றுகை போராட்டம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரீவால் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெத்ரிவால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால நிபந்தனை ஜாமினை வழங்கியது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. இதனையடுத்து அவர் இன்று சிறையில் இருந்து வெளிவருவார் என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவருடைய ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

MUST READ