இமாச்சலப் பிரதேசம், சிம்லா விமான நிலையத்தில் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
சிம்லா விமான நிலையத்தில் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. ஹிமாச்சல் துணை முதலமைச்சர், முகேஷ் அக்னிஹோத்ரியும், அம்மாநில டிபிஜியும் அந்த விமானத்தில் இருந்தனர். இதனால் அவசர அவசரமாக தர்மசாலாவுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
பயணிகள் நிறைந்த அந்த விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது. ஆனாலும் விமானம் விபத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பியது. அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விமானம் நிறுத்தப்பட்டது. இந்த விமானத்தில் இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, டிஜிபி அதுல் வர்மா ஆகியோரும் இருந்தனர். விமான நிறுவனமும் தொழில்நுட்ப சிக்கலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்தில் நடந்தது.
விமானத்தில் இருந்த பயணிகளிடையே பீதி நிலவியதாகக் கூறப்படுகிறது. பலர் பயந்தனர். இருப்பினும், மக்கள் அமைதியாக இருக்குமாறு குழுவினர் கேட்டுக்கொண்டனர். பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தின் டயர் வெடித்தது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. விமானம் குலுங்கியது. அதிர்ஷ்டவசமாக, விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் செல்லவில்லை. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்துக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக தர்மசாலாவுக்கான அடுத்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தர்மசாலா உட்பட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். துணை முதல்வரும், டிஜிபியும் விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்தின் அலுவலக இயக்குநர் கே.பி. சிங் தெரிவித்தார். தர்மசாலாவுக்கான விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம் ஓடுபாதையில் பாதியில் தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.