மருத்துவக் கலந்தாய்வில் இடத்தைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்
அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று (ஜூலை 20) காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் இடத்தைத் தேர்வு செய்து விட்டு, மருத்துவக் கல்லூரிகளில் சேராவிட்டால், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என மாணவர்களை தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
அதேபோல், ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி, முன் பணத்தொகை திருப்பித் தரப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.